Header Ads



ரெஜினோல்ட் குரேயின், வீட்டில் நடந்தது என்ன...?

வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இன்று (04) ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை வழங்கியுள்ளார்.

ரெஜினோல்டின் வீட்டில் 18 பேர் அடங்கிய குழுவொன்று கூடி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதற்கும் வேறு வழியில் கொண்டுசெல்வதற்கும் முயற்சிக்கப்பட்டுள்ளதாக செய்தி வௌியாகியுள்ளது. 

எனது வீட்டு வளாகத்தில் அவ்வாறான குழுவொன்று சந்திப்பதற்கு நான் இடம் வழங்கியது, பொய் இரசியங்களை மறைத்து, சூழ்ச்சி செய்வதற்கு இல்லை என்பதை நான் மிக தௌிவாகக் கூறுகிறேன். 

அவ்வாறான சூழ்ச்சியொன்று செய்ய வேண்டுமெனின், அதுபோன்ற பிரசித்தமான இடத்தில் கூட்டம் நடாத்தும் அளவிற்கு நான் சிறு குழந்தை அல்ல. 

சூழ்ச்சியொன்றை நடத்துவதாயின், அந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களிடம் நான் கையெழுத்துக்களைப் பெற்றிருப்பேனா? இல்லையே? இந்கே் கலந்துரையாடல் தொடர்பில் அன்றைய தினமே எஸ்.பி. திசாநாயக்கவிடம் அனைத்து விடயங்களையும் ஒழிவுமறைவின்றி நான் தௌிவுபடுத்தினேன். 

சூழ்ச்சியொன்று இல்லாததன் காரணமாகவே எதனையும் நான் மறைக்கவில்லை. ஜனாதிபதியால் இது குறித்து வினவப்பட்டபோது, எவ்வித மறைவுமின்றி நான் அறிவித்தேன். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி மாலை 3.15 மணிக்கு இந்தக் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டவுடன் ஜனாதிபதி அது குறித்து அறிந்துகொண்டார் என்பதை தெரிவித்துக்கொள்ள நான் விரும்புகின்றேன். 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச்செல்ல மாட்டேன் என்பதையும் கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்நோக்கும் அனைத்து சவால்களின்போது, அவரைக் கைவிடாது அவருடன் இருப்பேன் என்பதையும் நான் அறியத் தருகின்றேன் என வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.