Header Ads



ரணிலின் சொத்து, விபரங்கள் வெளியாகுமா..?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சொத்துக்களின் விபரங்களை டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்திடம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறியும் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி செயலயகத்திற்கு வழங்கிய உத்தரவு தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றம் கவனம் செலுத்தியுள்ளது.

தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைய விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில், கவனம் செலுத்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி சிரேஷ்ட உதவி செயலாளர் இரேஷா என்.வீரசேகர தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் சட்டமூலத்தின் 33 வது பிரிவிற்கமைய அவ்வாறான கோரிக்கை விடுப்பதற்கு உரிமை உள்ளதாகவும், அதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் எனவும் தகவல் அறியும் ஆணைக்குழுவின் இயக்குனர் ஜெனரலால் ஜயாதிச்ச தெரிவித்துள்ளார்.

குறித்த தகவல் வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றமே தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.