Header Ads



யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ளவர்களின் தேவைப்பாடுகள், மிக அதிகமாக உள்ளன - நிலாம்


யாழ் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் மீண்டும் மீள்குடியேறியுள்ள இளைஞர் யுவதிகளின் திறமைகளுக்கு போதுமான களத்தினை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் தமது சங்கம் கவனம் செலுத்தவுள்ளதாக இளைஞர் வலுவூட்டல்  கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்எஸ்..முஹம்மத் றியாஸ் தெரிவித்தார்.

யாழ் மநாகர சபை உறுப்பினர் கே.எம்.நிலாம் தலைமையில் நேற்று -07- இரவு இடம் பெற்ற இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவர்று கூறினார்.

யாழ் மாவட்டத்தில் தற்போது படிப்பபடியான மீள்குடியேற்றம்  இடம் பெறுவதாகவும்,இம்மக்களுக்கான தேவைப்பாடுகள் அதிகமாக காணப்படுவதாகவும் யாழ் மாநகர சபை உறுப்பினர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கான அரசியல்் தலைமைத்துவம் மிகவும் குறைவான நிலையில் மாநகர சபையின் ஊடக தன்னால் ஆன உதவிகளை அம்மக்களுக்கு செய்வதாகவும், இதற்கு மேலதிகமாக இம்மாவட்ட இளைஞர்களுக்கான துறை சார் பயிற்சிகள்,வழிகாட்டல்கள் என்பன மிகவும் முக்கியமாக தேவைப்படுவதாகவும் இதன் போது யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம் இளைஞர் வலுவூட்டல்  கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்எஸ்..முஹம்மத் றியாஸிடம் எடுத்துரைத்தார்.

இதனையடுத்து கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த சந்திப்பில்  சமூக சேவையாளர்  முஜா நிசார் மற்றும் தொழிலதிபர் சிராஜ் ஆகியோரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.

No comments

Powered by Blogger.