மஹிந்த அமைத்த ரயில் பாதையாம் - முதன்முதலாக சென்ற அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிர்ப்பு
மாத்தறையிலிருந்து பெலியத்த வரை அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் இன்று முதன் முதலாக சென்ற ரயிலில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பெலியத்த ரயில் நிலையத்துக்கு சென்ற அமைச்சரிடம் இது மஹிந்த ராஜபக்ஷவால் அமைக்கப்பட்ட ரயில் பாதை எனத் தெரிவித்து மஹிந்தவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஊடகங்களுக்கும் எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அங்கிருந்து சென்றுள்ளார்.
அத்துடன் குறித்த கண்காணிப்பு ரயிலில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள், பதாதைகளையும் தொங்க விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சொந்தப் பணத்தில் தனது தாய்க்கு பிணவரை கட்ட முடியாத ராஜபக்ஸ ரயில் பாதை கட்டுரதா குடும்பமே வாழ்ரது பொது மக்கள் பண்த்தில் என்பதை மரக்க வேண்டாம்.
ReplyDeletePerfectly correct excellent .MrImthiyas Railway extension not from his pocket They should have gained much more
ReplyDelete