Header Ads



சு.க.யின் ஜனாதிபதி, வேட்பாளர் மைத்திரிதான் - நிமல் சிறிபால அறிவிப்பு


சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இம்முறையும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பெயரிடப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்றும், கட்சியின் யோசனை மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக வேண்டும் என்பதே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது வேட்புமனு வழங்கும் தினத்திற்கு முன்தினமே தீர்மானிக்கப்படும் என்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அன்று இருந்த பலம் அதேபோன்று இன்றும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 08ம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என்றும், ஒக்டோபர் இறுதியாகும் போது வேட்புமனு பொறுப்பேற்றகப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.