ஹஜ் விண்ணப்பதாரிகளில் பலர், ஆர்வமற்று இருப்பதாக கவலை
இந்த வருடத்துக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு ஹஜ் விண்ணப்பதாரிகளில் பெரும்பான்மையினர் ஆர்வமற்றவர்களாக இருக்கிறார்கள்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஹஜ் கடமையினை மீள கையளிக்கக்கூடிய பதிவுக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்களது பயணத்தை உறுதி செய்யுமாறு 3000 விண்ணப்பதாரிகளுக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருந்தது. பயணத்தை உறுதி செய்வதற்கான இறுதித் தினம் ஜனவரி 3 ஆம் திகதி எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் நேற்றுவரை சுமார் 700 விண்ணப்பதாரிகளே தங்களது பயணத்தை உறுதி செய்துள்ளனர். இவ்வருடம் இலங்கைக்கு 3000 ஹஜ் கோட்டா கிடைக்கவுள்ளது. மேலும் மேலதிகமாக 1000 கோட்டா பெற்றுக்கொள்வதற்கு அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் சவூதி ஹஜ் அமைச்சருடன் சவூதியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஹஜ் விண்ணப்பதாரிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் குன்றியவர்களாக இருக்கும் நிலையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நிலுவையிலுள்ள விண்ணப்பதாரிகள் அனைவருக்கும் 14741 பதிவிலக்கம் வரை ஹஜ் பயணத்தை உறுதி செய்யும்படி கோரி கடிதங்கள் அனுப்பி வைக்கவுள்ளது. ஹஜ் பயணத்தை 25 ஆயிரம் ரூபா மீள கையளிக்கக்கூடிய பதிவுக்கட்டணம் செலுத்தி உறுதிப்படுத்தும் விண்ணப்பதாரிகளில் இவ்வருடம் ஹஜ் கடமைக்காக பதிவு எண் வரிசைக் கிரமப்படி பயணிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். கோட்டாவுக்கும் மேலதிகமாக பயணிகள் உறுதி செய்தால், எஞ்சியவர்கள் அடுத்த வருடம் பயணத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதேவேளை கடந்த வருடம் தங்களது பயணங்களை உறுதி செய்த பயணிகளில் 760 பேர் பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்புக் கிட்டவில்லை. அவர்கள் இவ்வருட ஹஜ் கடமையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளவர்கள் தாமதியாது பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்களது பயணங்களை உறுதி செய்து கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலீக் வேண்டியுள்ளார்.
There are number of reasons why people are not interested.
ReplyDelete1. Too expensive
2 You can perform Umra in a fraction of cost. Mostly one sixth of the cost.
3. Muslims are not happy with Saudi Araibia's standing and its human right records.
4. Mohamed Bins Salman behavior and his leading role in killing of journalist Jamal Khashoggi
5. World Muslims are very shame to say this MBS and his father are custodian of holy mosques.
6. Unless MBS is removed, Haj pilgrim will drop to 1 million.
பலருக்கும் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் கடிதங்களை அலுவலகத்தில் பதுக்கி வைக்கும் நிகழ்வும் உள்ளது. ஒரு வேளை அவ்வாறு கடிதம் கிடைக்கப்பெறாமை காரணமாக இருக்கலாம்.
ReplyDeleteஇரானிடம் பிச்சை வாங்கி சாப்ப்பிட்டுக்கொண்டு முஸ்லிமகளை குழுக்களாக மாற்றி குழப்பங்களை தூண்டி வேடிக்கை பார்க்கும் இலங்கையில் வாழும் சில விஷமிகளுக்கும் சவூதி செல்லத்தடை செய்யப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை
ReplyDelete