Header Ads



அர­நா­யக்க பிர­தேச செய­லாளர் பைசலுக்கு, பௌத்தர்களின் உச்சக்கட்ட புகழாரம்


”நீங்கள் எமக்கு சிறந்த தலை­மைத்­துவம் வழங்­கு­வ­துடன் பௌத்த சம­யத்­துக்கும் அப­ரி­மி­த­மான கௌர­வத்தை வழங்­கு­கி­றீர்கள்” என அர­நா­யக்க பிர­தேச செய­லாளர் இஸட்.ஏ.எம். பைசலைப் பாராட்டி, குறித்த பிர­தேச செய­லக பெரும்­பான்மை இன ஊழி­யர்கள் முக­நூலில் பதி­வொன்றை வெளி­யிட்­டுள்­ளனர்.

அர­நா­யக்க பிர­தேச செய­ல­கத்தில் இடம்­பெற்ற புத்­தாண்டை வர­வேற்கும் நிகழ்வைத் தொடர்ந்தே குறித்த நிகழ்வின் புகைப்­ப­டங்­க­ளுடன் இப் பதிவு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

” நீங்கள் இனத்தால் முஸ்லிம். நாம் சிங்­க­ளவர். நீங்கள் மதத்தால் இஸ்­லா­மிய பக்­தி­வான்கள். நாம் பௌத்­தர்கள். ஆனால், நீங்கள் எங்­க­ளுக்கு அர­னா­யக்க நக­ருக்கு  தலை­மைத்­துவம் வழங்­கு­கி­றீர்கள். அங்கு பெரும்­பான்­மைக்கு செவி சாய்க்­கி­றீர்கள். பௌத்த சம­யத்­திற்கு அப­ரி­மித கௌரவம் கொடுக்­கி­றீர்கள். உரிய இடம் அளிக்­கி­றீர்கள். புத்­தரை வணங்­கா­வி­டினும் புத்தர் சிலைக்கு மதிப்­ப­ளிக்­கி­றீர்கள். அய­லி­லுள்ள பௌத்­தர்­க­ளுக்கு கொள்­கையை நிலை நிறுத்த சகல வச­தி­க­ளையும் செய்து கொடுக்­கி­றீர்கள்.

பௌத்­தர்­க­ளா­கிய எங்­களால் மறக்­கப்­படும் சந்­தர்ப்­பங்­க­ளிலும் மற்றும் சமய ஆசா­ரங்கள் மறக்­க­டிக்­கப்­படும் சந்­தர்ப்­பங்­க­ளிலும் எம்மை நினை­வூட்டத் தூண்­டு­கி­றீர்கள். நீங்கள் இந்­நாட்டின் இதர மதத்­த­வர்­க­ளுக்கும் முன்­மா­திரி காட்­டு­கி­றீர்கள். உங்­க­ளது முதிர்ந்த அனு­ப­வங்­களும் இந்­நாட்டு கலா­சாரம் குறித்து உங்­க­ளிடம் காணப்­படும் பரந்த தெளிவும் இதர மதத்­த­வர்­க­ளிடம் காணப்­ப­டு­மாயின், இந்­நாட்டில் எப்­போதும் இன மோதல்­க­ளுக்கே இட­மில்­லாது போகும். எங்­க­ளது புண்­ணி­யங்­களை மேலும் வளர்த்துக் கொள்­வ­தற்கு உங்­க­ளது வழி­காட்­ட­லுக்கு எங்­க­ளது உளப்­பூர்­வ­மான நன்­மைகள் உரித்­தா­கட்டும். அர­னா­யக்க பிர­தேச செய­லா­ளரே! வெற்றி பெறட்டும்” என அப் பதிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அர­நா­யக்க பிர­தேச செய­லாளர் இஸட்.ஏ.எம். பைசல், கடந்த 2016 ஆம் ஆண்டு அப் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு அனர்த்தத்தின் போது மக்களுக்கு சிறப்பான சேவையை ஆற்றியிருந்ததுடன் இது தொடர்பில் சகல தரப்பினதும் பாராட்டைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

7 comments:

  1. Congratulations and best wishes to you

    ReplyDelete
  2. He is a great service man; public servant; as long as you are clean you do not need to worry ..
    Set example ..
    Do not cross the red line.
    Respect budhsit people ..
    Help them as if you are one of them ..
    They must feel it ..
    99% Sinhalese people grateful people ..
    You have won their mind and hearts ..
    That is a good example to all

    ReplyDelete
  3. நான் இவரை பாராட்டுவது மட்டுமல்ல, கூடவே படித்தவர் என்பதால் மிகவும். சந்தோசபடுகிரேன்.இவரது நுனுக்கமும் நீதிநேர்மையும் கடமையுனர்வும் எல்லா முஸ்லிம் அரசியல் அதிகாரிகளிடமும் இருப்பின் இலங்கையின் நிர்வாகமே மாரி அமைவது உருதி.

    ReplyDelete
  4. Wish him all the best. He is an example for all other Muslim government servants and officers. He changed racist people into so brotherly. It's marvelous achievement.

    ReplyDelete
  5. Well example for our entire
    Community.this is what we need to do here.

    ReplyDelete

Powered by Blogger.