அரநாயக்க பிரதேச செயலாளர் பைசலுக்கு, பௌத்தர்களின் உச்சக்கட்ட புகழாரம்
”நீங்கள் எமக்கு சிறந்த தலைமைத்துவம் வழங்குவதுடன் பௌத்த சமயத்துக்கும் அபரிமிதமான கௌரவத்தை வழங்குகிறீர்கள்” என அரநாயக்க பிரதேச செயலாளர் இஸட்.ஏ.எம். பைசலைப் பாராட்டி, குறித்த பிரதேச செயலக பெரும்பான்மை இன ஊழியர்கள் முகநூலில் பதிவொன்றை வெளியிட்டுள்ளனர்.
அரநாயக்க பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வைத் தொடர்ந்தே குறித்த நிகழ்வின் புகைப்படங்களுடன் இப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
” நீங்கள் இனத்தால் முஸ்லிம். நாம் சிங்களவர். நீங்கள் மதத்தால் இஸ்லாமிய பக்திவான்கள். நாம் பௌத்தர்கள். ஆனால், நீங்கள் எங்களுக்கு அரனாயக்க நகருக்கு தலைமைத்துவம் வழங்குகிறீர்கள். அங்கு பெரும்பான்மைக்கு செவி சாய்க்கிறீர்கள். பௌத்த சமயத்திற்கு அபரிமித கௌரவம் கொடுக்கிறீர்கள். உரிய இடம் அளிக்கிறீர்கள். புத்தரை வணங்காவிடினும் புத்தர் சிலைக்கு மதிப்பளிக்கிறீர்கள். அயலிலுள்ள பௌத்தர்களுக்கு கொள்கையை நிலை நிறுத்த சகல வசதிகளையும் செய்து கொடுக்கிறீர்கள்.
பௌத்தர்களாகிய எங்களால் மறக்கப்படும் சந்தர்ப்பங்களிலும் மற்றும் சமய ஆசாரங்கள் மறக்கடிக்கப்படும் சந்தர்ப்பங்களிலும் எம்மை நினைவூட்டத் தூண்டுகிறீர்கள். நீங்கள் இந்நாட்டின் இதர மதத்தவர்களுக்கும் முன்மாதிரி காட்டுகிறீர்கள். உங்களது முதிர்ந்த அனுபவங்களும் இந்நாட்டு கலாசாரம் குறித்து உங்களிடம் காணப்படும் பரந்த தெளிவும் இதர மதத்தவர்களிடம் காணப்படுமாயின், இந்நாட்டில் எப்போதும் இன மோதல்களுக்கே இடமில்லாது போகும். எங்களது புண்ணியங்களை மேலும் வளர்த்துக் கொள்வதற்கு உங்களது வழிகாட்டலுக்கு எங்களது உளப்பூர்வமான நன்மைகள் உரித்தாகட்டும். அரனாயக்க பிரதேச செயலாளரே! வெற்றி பெறட்டும்” என அப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரநாயக்க பிரதேச செயலாளர் இஸட்.ஏ.எம். பைசல், கடந்த 2016 ஆம் ஆண்டு அப் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு அனர்த்தத்தின் போது மக்களுக்கு சிறப்பான சேவையை ஆற்றியிருந்ததுடன் இது தொடர்பில் சகல தரப்பினதும் பாராட்டைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Congratulations and best wishes to you
ReplyDeleteHe is a great service man; public servant; as long as you are clean you do not need to worry ..
ReplyDeleteSet example ..
Do not cross the red line.
Respect budhsit people ..
Help them as if you are one of them ..
They must feel it ..
99% Sinhalese people grateful people ..
You have won their mind and hearts ..
That is a good example to all
நான் இவரை பாராட்டுவது மட்டுமல்ல, கூடவே படித்தவர் என்பதால் மிகவும். சந்தோசபடுகிரேன்.இவரது நுனுக்கமும் நீதிநேர்மையும் கடமையுனர்வும் எல்லா முஸ்லிம் அரசியல் அதிகாரிகளிடமும் இருப்பின் இலங்கையின் நிர்வாகமே மாரி அமைவது உருதி.
ReplyDeleteWish him all the best. He is an example for all other Muslim government servants and officers. He changed racist people into so brotherly. It's marvelous achievement.
ReplyDeleteWell done
ReplyDeleteWell done Mr. Faisal.
ReplyDeleteWell example for our entire
ReplyDeleteCommunity.this is what we need to do here.