கொழும்பிலுள்ள அமெரிக்க, தூதரக அலுவலகத்தில் தீ
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று -12- அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
4 தீயணைப்பு வாகனங்கள் 12 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் இரகசியமாகவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Wire Short As usual...
ReplyDeleteBut USA Embassy is not the property of Muslims. How come wire Short???