Header Ads



ஐ.தே.க. பிரதிநிதியாக, சந்திரிக்கா செயற்படுகிறார் - ஜனாதிபதி குற்றச்சாட்டு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் ஒரு வாரத்திற்குள் நியமிக்கப்படுவர்கள் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றபோது இந்த தகவலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சிலர் தமக்கு எதிராக செயற்படுகின்ற நிலையில் தாம் கட்சியை கட்டியெழுப்ப உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதியாக செயற்படுவதாகவும் மைத்திரி நேற்றைய கூட்டத்தின் போது அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.