ஜனாதிபதி தன்னை, அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அழித்து விட்டாரென, கடுவலை நகர சபையின் முன்னாள் மேயர் ஜீ.எச். புத்ததாஸ தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் பொது வேட்பாளராக களமிறங்கியப் போது தன்னை அழைத்ததாகவும் அதற்கமைய தான் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கடந்த மாகாண சபைத் தேர்தலில் மொட்டுவின் வேட்பாளராக களமிறங்கியிருந்தால் இன்று தான் கடுவெல மாநகர சபையின் மேயராக இருந்திருப்பேன் என்றும் ஜீ.எச். புத்ததாஸ தெரிவித்துள்ளார்.
Post a Comment