Header Ads



சந்திரிக்காவின் பதவி பறிக்கப்படுமா..?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வகிக்கும் பதவிகளை பறிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கட்சியின் உள்ளக தகவல்கள் கிடைக்கின்றன.

சந்திரிக்காவின் அழுத்தம் காரணமாக கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் உப செயலாளரும் மேல் மாகாண சபை முதலமைச்சருமான இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ அந்த பதவியில் இருந்து இராஜினாமா செய்த நிலையில், அவருக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர புதிய செயலாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தம் காரணமாகவே, ரோஹன லக்ஷ்மன் பியதாஸ பதவியை ராஜினாமா செய்திருந்தார் என இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தொடர்பில் சந்திரிக்கா தொடர்ந்து விமர்சித்து பேசினார். அதே போன்று விமர்சித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். இவ்வாறான சம்பவங்களினால் அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டதென இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கு ஏற்ப செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் எதிர்வரும் நாட்களில் சந்திரிக்கா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் பதவி மற்றும் ஆலோசகர் பதவி தொடர்பில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.