Header Ads



ஜனாதிபதி வேட்பாளர் குறித்து, கருத்துத் தெரிவிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து கருத்துத் தெரிவிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவினர் பொரல்லையிலுள்ள திலங்க சுமதிபாலவின் வீட்டில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிலர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக கூறுகின்றனர். சிலர் கோட்டாபய என்கின்றனர். இதனால், கட்சிக்குள் கருத்து முரண்பாடுகளே அதிகரிக்கின்றன.

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதே எமது சவாலாகும். கூட்டணி அமைத்து ஜனாதிபதித் தேர்தலுக்கு முகம்கொடுக்கும் போது தற்போதைய ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கட்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.