Header Ads



மொட்டு சின்னத்தின்கீழ் போட்டியிட, மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானம்

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் மொட்டு சின்னத்தின்கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அதன் தலைவரான, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம், தேர்தல்களை நடத்துவதற்கு ஒருபோதும் தயாராக இல்லை.

இந்த நிலையில், நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவதற்கும், தூதரங்களைத் தெளிவுபடுத்தவதற்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேர்தலை நடத்தவதற்கு வலியுறுத்தவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காஞ்சன ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.