பொருத்தமில்லாதவர்களை நியமித்து ஜனாதிபதி, ஆளுநர் பதவியை கொச்சைப்படுத்தியுள்ளார்
(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருத்தமில்லாத ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி ஆளுநர் பதவியை சொச்சைப்படுத்தியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர்.
மாகாண ஆளுநர் நியமனமானது மிகவும் கெளரவமான பதவியாக மதிக்கப்படவேண்டியதொன்றாகும். அந்த நியமினங்கள் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சி சார்பற்ற கெளரவமான நிலையில் இருப்பவர்களுக்கே வழங்கப்படவேண்டும். ஆனால் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநர் என்ற பதவியையும் அகெளரவப்படுத்தி, இவ்வாறானவர்களை நியமித்து அவரும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றார்.
ஆளுநர், ஜனாதிபதி, நியமனம், விஜித்த ஹேரத்
மத்திய வங்கியை கொள்ளையிட்ட கும்பலை காப்பாற்றிய ஜேவிபி ஜோக்கர்களுக்கு ஆளுநர் நியமத்தை பற்றி மூச்சுவிட கூட தகுதில்லை
ReplyDelete