Header Ads



சுவிட்ஸர்லாந்தில் இலங்கை ஆசிரியை, விபத்தில் மரணம் (படங்கள்)


சுவிட்ஸர்லாந்தின் Adlikon - Regensdorf பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் செலுத்தி வந்த கார் கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 43 வயதுடைய பெண் ஒருவரே உயிரிந்துள்ளதுடன், 22 வயதான கனரக வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் மேலும் தெரியவருவதாவது...

தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச் றேகன்ஸ்டோர்ப் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியரும் அப் பள்ளியின் முதல்வரின் துணைவியாருமான திருமதி சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் இன்று பிற்பகல் பள்ளிக்குச் செல்லும் வழியில் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார்.


No comments

Powered by Blogger.