Header Ads



கொழும்பில் பெண்களின் அந்தரங்க, பகுதிகளை வீடியோ எடுக்கும் நபர்கள்

கொழும்பில் பெண்களின் அந்தரங்க பகுதிகளை காணொளியாக பதிவு செய்யும் நபர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

நுகேகொடயில் தொழில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண்களின் அந்தரங்க பகுதிகளை அதன் முகாமையாளர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.

தொழில் முகவர் நிறுவனம் ஒன்றின் முகாமையாளராக பணியாற்றி வரும் குறித்த நபர், பல வருடங்களாக பெண்களை ஆபாசமாக அவர்களுக்கு தெரியாமல் காணொளியாக பதிவு செய்து வந்துள்ளார்.

பல பெண்கள் இந்த நபரின் இரகசிய காணொளிக்குள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொழில் எதிர்பார்ப்பில் வரும் பெண்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை, குறித்த நபர் மிகவும் நுட்பமான முறையில் படம் பிடித்துள்ளார்.

அலுவலக முகாமையாளரின் மேசைக்கு கீழ் ஒரு பையை வைத்து அதற்குள் கையடக்க தொலைபேசி ஒன்றின் கமராவை இயக்கிய நிலையில் மறைத்து வைக்கப்படுகின்றது.

அதற்கு நேராக பெண்கள் அழைக்கப்படுகின்றார்கள். அந்த பெண்களுக்கு தெரியாமலேயே அவர்களின் அந்தரங்க பகுதிகள் அந்த கமராவில் பதிவாகின்றது.

அந்த கமரா சரியாக படம் பிடிக்கின்றதா என்பதனை குறித்த முகாமையாளர் தொடர்ந்து சோதனையிட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறான மோசடியான கும்பல்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு பெண்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2 comments:

  1. இதில் ஆச்சர்யப்படுவதட்கு ஒன்றும் இல்லை ஏன் என்றல், இஸ்லாம் மிக தெளிவாக ஆடை அமைப்பை பற்றி பேசுகின்றது, படைத்த இறைவனுக்கு தெரியும் எப்படி பட்ட திருடர்கள் இந்த உலகில் இருப்பார்கள் அவர்களிடம் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி என்று. அதனால் தன 1400 வருடங்களுக்கு முன்னாலே சொல்லிவிட்டான். அதை கேட்டு அதன் படி நடந்தால் இந்த பிரச்சினை வருவதட்கு இடமே இல்லை. ஏன் இப்படி நெனைக்க கூட சந்தர்ப்பம் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.