பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு, எதிரான யுத்தம் எனக்கு முன்னுதாரணம் - மைத்திரி
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் முழு உலகிற்கும் முன்னுதாரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்சிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிசேன அங்கு விருந்துபசார நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் எனக்கு தனிப்பட்ட முன்னுதாரணமாக உள்ளது என சிறிசேன தெரிவித்துள்ளார்
நீங்கள் போதைப்பொருளிற்கு எதிராக மேற்கொண்டுள்ள யுத்தம் முழு உலகிற்கும் எனக்கும் முன்னுதாரணமாக உள்ளது என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியிடம் சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனது நாட்டில் போதைப்பொருள் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது,அதனை கட்டுப்படுத்துவதற்கு உங்கள் பாதையில் பயணிக்கவேண்டும் என கருதுகின்றோம் என சிறிசேன தெரிவித்துள்ளார்
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் காரணமாக 5000ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையிலேயே இலங்கை ஜனாதிபதியின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
Paithiyakaran pattum solwan pohattum vittuvidu
ReplyDelete