சிங்கள - முஸ்லிம் அரசியல்வாதிகளே, தம்புள்ள பள்ளிவாசல் நெருக்கடிக்கு காரணம்
‘சிங்கள அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் தலையீட்டினாலேயே தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமலிருக்கிறது. தம்புள்ளை முஸ்லிம்களும் சிங்களவர்களும் பேச்சுவார்த்தைகள் நடாத்தி இப் பிரச்சினைக்கு தாமதமில்லாமல் தீர்வு காண வேண்டும்’ என தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத தெரிவித்தார்.
தம்புள்ளை புனித பூமி எல்லைக்குள் அமைந்துள்ள தம்புள்ளை பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக்கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த வெள்ளிக்கிழமை தம்புள்ளை ஓய்வு விடுதியில் (ரெஸ்ட் ஹவுஸ்) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள், தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத ஆகியோர் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் வினவியபோதே தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
‘நாட்டில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்தில் வடக்கு, கிழக்கு பகுதி முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வடக்கிலிருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களிடம் கப்பம் அறவிடப்பட்டது. பலர் உயிர்களைப் பலி கொடுத்தனர். நாட்டில் மீண்டும் இவ்வாறான நிலை உருவாகக் கூடாது. முஸ்லிம்களும் சிங்களவர்களும் நல்லுறவுடன் வாழவேண்டும். அதற்கு பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
வெள்ளிக்கிழமை நடந்த கலந்துரையாடல் எவ்வித தீர்மானங்களுமின்றி முடிவுற்றது. தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும். எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி பிரச்சினைகள் சுமுகமாக தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களது சுயநலன்கருதியே தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் செயற்படுகின்றனர். அவர்கள் தூரநோக்கோடு செயற்பட வேண்டும் என்றார்.
நீங்கள் ஏன், எப்ப பார்த்தாலும், மற்றய மதங்களில் சொறிந்து கொண்டிருக்கிறீர்கள்?
ReplyDeleteஇலங்கையில பௌத்தர்களின் புனிதபூமிக்குள் போய் உங்கள் பள்ளிவாசல்களை கட்டுகறீர்கள், அங்கு இந்தியாவில் ராமரின் புனிதபூமி (அயோத்தி) யில் பள்ளிவாசல் கட்டுகிறீர்கள்.
We are muslims ok but your sinhala extrimes making problems always.Give mosque lane Dambulla city area then we can build new mosque.
ReplyDelete@அந்தோணி சிங்களவனின் நாட்டில் வந்தேறி தமிழன் தனி நாடு கேட்பதும் இதற்க்கு பொருந்தும் தானே......
ReplyDeleteஅந்தோனி பச்சைத் துவேஷம்தான் உனது வாயிலிருந்து எப்போதும் வருவதாகவுள்ளது
ReplyDeleteஅந்தோனி நாங்கள் புதிதாக அந்த இடத்தில் பள்ளிவாசலை கட்டவில்லை. பல வருடங்களாக அந்த இடத்திலேயே இருக்கின்றது. தயவு செய்து இனவாதத்தை பரப்ப வேண்டாம்.நீங்களும் இந்த நாட்டில் சிறுபான்மையினரே. உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் விளக்கும்.
ReplyDeleteDear Muslim friends,
ReplyDeleteஅது சரி...,தான் நில மோசடி செய்து, ஒரு இந்து கோவிலை உடைத்து, அந்த காணியை முஸ்லிம்களுக்கு கொடுத்ததாக பகிரங்கமாக வாக்குமூலம் கொடுத்தவரை நீங்கள் ஆதரித்து, தலைவராக கொண்டாடுவதிலே தெரிகிறதே உங்கள் பொதுநலமும், நேர்மையும்.
அதனால், தம்புள்ளை பள்ளிவாசல் காணியும் அதே வழியில் பெறப்பட்டிருக்கலாம் என்று நிணைப்பதில் தவறா?