Header Ads



மாவ­னெல்ல புத்தர் சிலை உடைப்புடன், பெரும்­பான்மை முஸ்­லிம்­களுக்கு தொடர்பில்லை - பொது­ப­ல­ சேனா

மாவ­னெல்ல சம்­ப­வங்­களில் பெரும்­பான்மை முஸ்­லிம்­களின் தொடர்பு இல்லை. அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்கள், சில அர­சி­யல்­வா­திகள் மற்றும் சர்­வ­தேச உத­விகள் மூலமே இவ்­வா­றான செயல்­களை முன்­னெ­டுக்­கின்­றனர்.

இச்­சந்­தர்ப்­பத்தில் சிங்­கள பௌத்­தர்கள் குறிப்­பாக பௌத்த இளை­ஞர்கள் மிகவும் புத்­தி­யுடன் தங்­க­ளது கண்­ட­னங்­களை வெளி­யிட வேண்டும், செயற்­ப­ட­வேண்டும் என பொது­ப­ல­சேனா வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது. அவ் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

மாவ­னெல்­லையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களால் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டமை தொடர்பில் நாம் ஆச்­ச­ரி­யப்­ப­ட­வில்லை. குழப்­பங்­க­ளுக்­குள்­ளா­க­வில்லை. ஏனென்றால் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் பற்றி நாம் நன்கு அறிந்து வைத்­தி­ருந்தோம். இந்த அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ராக நாம் பொறுப்­புடன், புத்திக் கூர்­மை­யு­டனே செயற்­ப­ட­வேண்டும்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க 2001இல் பத­வி­யேற்­றதும் புத்­த­சா­சனம் தொடர்பில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மித்தார். அந்த ஆணைக்­கு­ழுவின் அறிக்கை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கீழ் 2002 ஆம் ஆண்டில் வெளி­யி­டப்­பட்­டது. அவ்­வ­றிக்­கையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களின் செயற்­பா­டுகள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன. 2009 ஆம் ஆண்டில் முன்னாள் ஆளுநர் அலவி மௌலா­னாவும் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் பற்றி பகி­ரங்­க­மாக கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். இது­பற்றி அப்­போ­தைய அர­சாங்கம் எது­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கா­மை­யி­னா­லேயே பொது­ப­ல­சேனா இது பற்றி மக்கள் மத்­தியில் பிர­சாரம் செய்­தது.

இந்த சம்­ப­வங்­களில் பெரும்­பான்மை முஸ்­லிம்­களின் தொடர்பு இல்லை. அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்கள் சில அர­சி­யல்­வா­திகள் மற்றும் சர்­வ­தேச உத­விகள் மூலம் இந்த செயல்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். இந்தக் குழு­வினர் அளுத்­கம, பேரு­வளை, கிந்­தோட்டை, திகன மற்றும் கம்­பளை பகு­தி­களில் வன்­மு­றை­களை ஏற்­ப­டுத்தி அவற்றை பொது­ப­ல­சேனா மீது சுமத்­தி­னார்கள்.

இச்­சந்­தர்ப்­பத்தில் சிங்­கள பௌத்­தர்கள் குறிப்­பாக பௌத்த இளை­ஞர்கள் மிகவும் புத்­தி­யுடன் இதற்கு எதி­ராக தங்­க­ளது கண்­ட­னங்­களை வெளி­யிட வேண்டும். செயற்­பட வேண்டும். மாவ­னெல்­லையில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டமை திடீ­ரென நிகழ்ந்த சம்­ப­வ­மல்ல. எமது ஆட்­சி­யா­ளர்­களின் அசி­ரத்தை மற்றும் மடமைத் தனம் கார­ண­மாக உரு­வெ­டுத்த முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களின் திட்­ட­மிட்ட செய­லாகும்.

முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் தற்­போது அழிக்­கப்­பட முடி­யாத பாரிய விருட்­ச­மாக வளர்ந்துள்ளது. இதனை ஆரம்பத்திலே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதிருக்க 2002 ஆம் ஆண்டின் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளை உடன் அமுல்படுத்த வேண்டும். இந்தக்கோரிக்கை எதிர்வரும் தேர்தல் காலங்களில் மக்களால் முன்வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

3 comments:

  1. All Muslim wish to punish the culprit who has done this kind of idiotic work, government and police need to investigate deeply to find out the truth not because of Muslim, few Muslim were arrested base on suspecting and end of the investigation they could be innocent, so Budish need to be silent , Most of Sri Lankan are suspecting Anti Muslim political and Budish group who are still targeting Muslim community in different way to launch a massive attack, Rajapaksa , vimal vira vamsa and sambika are suspected politician to achieve some benefits,
    if anyone generally thinks, now a days Muslim are carefully walk in sri lanka thinking of past incident by Bu-dish extremist , they know well even small such things can bring big issue in sri lanka, so musims never think to do such things to Budish. Muslim has loving peace ,
    all Buhish need to put this on their mind,

    Also Muslim like to investigate and punish all culprit who has done past anti Muslim incidents in same manner, those impact were massive including many death. if you do the same job you are the police and defence forces otherwise you are ?????????????

    ReplyDelete
  2. பொதுபல சேனாவின்முஸ்லிம் பெயர்தாங்கி பிரிவின் சதியே இவை

    ReplyDelete
  3. SLTJ karanuku wai kooda than thimurum kooda.panathukua peeyaium thinnubawangal muslimgal idaye wetrumaiyai piriwinayai atpaduthum kootam. Shiyawa olipangala iedha papom mudhalawadhu shia kootatha adiyudan alikawendum. Papom andha alawuku iedhil karisanai katuhindraner andu. Ipadiku unmayana muslim andha jamathum kidayadhu.

    ReplyDelete

Powered by Blogger.