Header Ads



அநுராதபுர சிறைக்குச்சென்று ,கைதான 7 மாணவர்களுடன் ஹரீஸ் பேச்சு

பௌத்த விரையின் மேல் ஏறி படமெடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் சந்தித்துள்ளார்.

அனுராதபுர சிறைச்சாலைக்கு இன்று -28- விஜயம் மேற்கொண்ட அமைச்சர் குறித்த மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் போது அமைச்சர் கூடிய விரைவில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்திலுள்ள தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளை சந்தித்து குறித்த மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்தோடு அங்கு வருகை தந்திருந்த கைதுசெய்யபப்பட்ட மாணவர்களின் பெற்றோருடனும் கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது சட்டத்தரணி ஏ.எம்.ஹபீப் றிபான் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நெளபர் ஏ. பாவா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

1 comment:

Powered by Blogger.