Header Ads



புத்தர் சிலை உடைப்பு, கைதான 7 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர் - 16 வரை விளக்கமறியல் நீடிப்பு

மாவ­னெல்லை மற்றும் அண்மித்த  பகு­தி­களில்  இரவில்  4 இடங்­களில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்   7 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கைதான  அனைவரும்  இன்று -02.  முற்பகல் மாவனல்லை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர். 

இதனை அடுத்து குறிப்பிட்ட சந்தேக நபர்களை 14 நாட்களுக்கு ( 16 ஆம் திகதி வரை ) விளக்கமறியலில் வைக்குமாறும்,  சம்பவம்    தொடர்பில் சி ஐ டி விசாரணைகள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட சந்தேக நபர்களை மாவனல்லை தவிர இலங்கையில்  மற்ற இடங்களில்   இதற்குமுன்னர் புத்தர் சிலைகள்  சேதமாக்கபட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யவும் சி ஐ டிஇ நீதிமன்றில் அனுமதி கேட்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்  இருவர் தேடப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Change the heading.
    What are you thinking you are writing..... Until now they are suspects in front of LAW...

    ReplyDelete

Powered by Blogger.