புத்தர் சிலை உடைப்பு, கைதான 7 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர் - 16 வரை விளக்கமறியல் நீடிப்பு
மாவனெல்லை மற்றும் அண்மித்த பகுதிகளில் இரவில் 4 இடங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கைதான அனைவரும் இன்று -02. முற்பகல் மாவனல்லை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதனை அடுத்து குறிப்பிட்ட சந்தேக நபர்களை 14 நாட்களுக்கு ( 16 ஆம் திகதி வரை ) விளக்கமறியலில் வைக்குமாறும், சம்பவம் தொடர்பில் சி ஐ டி விசாரணைகள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
இதேவேளை குறிப்பிட்ட சந்தேக நபர்களை மாவனல்லை தவிர இலங்கையில் மற்ற இடங்களில் இதற்குமுன்னர் புத்தர் சிலைகள் சேதமாக்கபட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யவும் சி ஐ டிஇ நீதிமன்றில் அனுமதி கேட்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இருவர் தேடப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
Change the heading.
ReplyDeleteWhat are you thinking you are writing..... Until now they are suspects in front of LAW...