மஹிந்த உட்பட 47 பேரின், உறுப்புரிமையை பறிக்க அரசு சூழ்ச்சி
எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவர் தரப்பின் 47 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புறுமையினை பறிப்பதற்கு அரசாங்கம் சூழ்ச்சி செய்து வருகின்றது.
கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரனின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தடையாக தற்போது பாராளுமன்றத்தில் பொறுப்பு வாய்ந்த எதிர் கட்சி ஒன்று செயற்படுவது அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் அலுவலகத்தில் இன்று -07- திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Post a Comment