Header Ads



முஸ்லிம்களை ஒதுக்கும் ஐதேக - 2 ஆளுநர்களை நியமித்து முஸ்லிம்களை கௌரவித்த மைத்திரி

முஸ்லிம்க‌ளின் வாக்குப்ப‌ல‌த்தால் ஆட்சிக்கு வ‌ந்த‌ ஐ தே க‌ முஸ்லிம்க‌ளை புற‌க்க‌ணித்து த‌மிழ் கூட்ட‌மைப்பின் ம‌குடிக்கு ஆடி முஸ்லிம்க‌ளை ஒதுக்கும் நிலையில், முஸ்லிம்க‌ள் பெரும்பாலும் வாக்களிக்காத‌  சுத‌ந்திர‌க்க‌ட்சியின் த‌லைவ‌ர் மைத்திரிபால‌ சிறிசேன‌ இர‌ண்டு முஸ்லிம் ஆளுண‌ர்க‌ளை ஒரே நேர‌த்தில் நிய‌மித்தமைக்காக‌ உல‌மா க‌ட்சி ஜ‌னாதிப‌திக்கு த‌ன‌து பாராட்டுக்க‌ளை தெரிவித்துள்ள‌து. 

இது ப‌ற்றி முஸ்லிம் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து,

இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ள் பெரும்பாலும் ஐ தே க‌ட்சிக்கும் அத‌னுட‌ன் இணைந்துள்ள‌ க‌ட்சிக‌ளுக்கும் வாக்க‌ளிப்ப‌வ‌ர்க‌ளாக‌வே இருந்து வ‌ந்துள்ளார்க‌ள். ஆனாலும் ஐ தே க‌வினால் முஸ்லிம் ச‌மூக‌ம் ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌தே அதிக‌ம்.

க‌ட‌ந்த‌ பொது தேர்த‌லில் 98 வீத‌ முஸ்லிம்க‌ள் ஐ தே க‌ கூட்டு க‌ட்சிக்கு வாக்க‌ளித்தும் மேல் மாகாண‌த்துக்கு த‌மிழ‌ர் ஒருவ‌ரை நிய‌மித்து விட்டு கிழ‌க்கு மாகாண‌த்துக்கு முஸ்லிம் ஒருவ‌ரை ஆளுன‌ராக‌ நிய‌மிக்காத‌ துரோக‌த்தை செய்த‌து. இத‌னை பெறுவ‌த‌ற்கு கையாலாகாத‌ க‌ட்சிக‌ளாக‌ ஐ தேக‌வுட‌ன் அடிமையாகியுள்ள‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளும் இருந்த‌ன‌.

இந்த‌ நிலையில் க‌ட‌ந்த‌ அர‌சிய‌ல் குழ‌ப்ப‌த்தின் போதும் முஸ்லிம் ச‌மூக‌ம் பெரும்பாலும் ர‌ணிலுட‌ன் நின்ற‌ போதும் இர‌ண்டு முஸ்லிம் ஆளுன‌ர்க‌ளை ஜ‌னாதிப‌தி நிய‌மித்த‌த‌ன்மூல‌ம்  முஸ்லிம்க‌ளை மிக‌ப்பெரிய‌ அள‌வில் க‌வுர‌வித்துள்ளார். இத‌ற்காக‌ முஸ்லிம் ச‌மூக‌ம் ஜ‌னாதிப‌திக்கு ந‌ன்றிக்க‌ட‌ன் ப‌ட்டுள்ள‌து.

இந்த‌ வ‌கையில் 
மைத்திரி த‌லைமையிலான‌ ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌ முன்ன‌ணியுட‌ன் 2005 முத‌ல்  இணைந்து செய‌ற்ப‌டுவ‌த‌ற்காக‌ முஸ்லிம் உல‌மா க‌ட்சி பெரிதும் ம‌கிழ்ச்சிய‌டைகிற‌து. 

9 comments:

  1. நீங்கள் ஒரு முதலாம் நம்பர்(நம்பர்) பச்சைப் பேயன்.. .

    ReplyDelete
  2. This is ranil govt.
    Mubarak moul neenga unp yai
    Virunba villai ok.
    Neengalum vassudewa wum orey
    Kuutam thaan.wayasu koolaru.

    ReplyDelete
  3. NOT THAT MY3 LOVE MUSLIMS BY APPOINTING HISBALLA MY3 IS TRYING TO TEACH A LESION TO SAMPANTHAN,HAKKEEM AND RISHARD BDIUDEEN WHO SUPPORTED RANIL.NOW MORE THAN SAMPATHAN HAKEEM AND RISHARD WILL HAVE A HARD TIME IN THE EAST FACING HISBAALS ACTIONS AGAINST THEM.IT IS INTRESTING TO NOTE WHAT VIYALEDRAN ,KARUNA,WHO ARE LICKING THE BOOTS OF MY3 AND MAHINDA HAS TO SAY IN THIS MATTER.LUCK IS IN THE WAY TO ATHAULLA WHO MIGHT GET VACANT NATIONAL LIST POST AS MP IN PLACE OF HISBALLA.

    ReplyDelete
  4. Ulama Katchi solluwathu unmai than. UNP aatchiyil munnal janathipathi Rana Singhe premadasa mattume Muslimkalukku sevai seithullar. Ranil wickramasinghe ethuwum seythathu illai. Awar oru throki. Awar muslimkalukku sewai seyya awasiyam illai muslimkalin urimaiyai pathukatthal pothum. Athai kooda awar seyyawum illai seyya porathum illai. Muslimkal ranilai aatharippathai konjam Maru pariseelanai seyya wendum.

    ReplyDelete
  5. ஆரம்பத்திலே இ்ந்தநடவடிக்கை எடுத்திருந்தால் நம்பத் தகுந்த விடயம் தான்.இந்த வருடம் தேர்தல் நடக்கும் வருடமாக இருப்பதால் எப்படி மைத்ரி ஐயாவை நம்புவது??

    ReplyDelete
  6. முபாறக் மௌலவி அவர்களே ஆளுநர்களை நியமிக்கின்ற அதிகாரம்
    முழுக்க முழுக்க ஜனாதிபதியிடமே உள்ளது.2015ல் இதே ஜனாதிபதிதான்
    செயல்பட்டார் இப்போதும் இதே ஜனாதிபதிதான் செயல்படுகிறார்.
    நிலமை இவ்வாறு இருக்க யூ.என்.பி
    மீது பழிபோடும் உங்கள் அறியாமயை
    என்னவென்று சொல்வது.

    ReplyDelete
  7. உண்மைதான் ஜனாதிபதியை பொருத்தவரை ஏற்கனவே அவர் இப்படியான விடயங்கள் செய்து இருப்பார் இருந்தும் ரணீல் அவர்களை நம்பியதால் ஜனாதிபதி ஒன்றும் நடக்க வில்லை உதாரணம் முஸ்லிம் ஒருவர் முப்பதுவருடதிற்கு பிற்பாடு வவுனியாவில் அரசாங்க அதிபராக நியமித்தது அம்பாரை அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்தது யுத்ததால் பாதிக்க பட்ட மக்களின் காணிகளை விடுவிப்பு செய்தது ஏன் தற்போது இரண்டு முஸ்லிம்களை ஆளுனராக நியமித்தது கிழக்கு மாகாணம் வரலாற்று சாதனை ஒரு முஸ்லிமை நியமித்தது அது ஒரு மாதம் ஆளுனராக இருந்தாலும் வரலாறு சொல்லும் முஸ்லிம் நபர் ஒருவர் ஆளுனராக இருந்தார் அதனால கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையக வாழ்கின்றார்கள் என்பதும் சர்வதேசம் பார்க்க கூடும் அதனால நல்லது யார் செய்கின்றார்களோ அவர்களை வாழ்த்துவோம் முஸ்லிம்கள் செய்த நன்றி கடனுக்கு ஜனாதிபதி நன்றி கடண் செலுத்துகின்றார் அதனால நாங்கள் இருக்கிர காலதிற்குள் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து கொள்ளுவோம்

    ReplyDelete
  8. Kaalam mulukka ippadiye aemaandhu muttaalagave irukkinrathu nam samoogam

    ReplyDelete

Powered by Blogger.