Header Ads



வண்ணாத்திவில்லு - லக்டோ தோட்டத்தில், 100 கிலோ வெடிபொருட்களுடன் 4 பேர் கைது

வெடிபொருட்களோடு நான்கு சந்தேகநபர்கள் புத்தளம் – வண்ணாத்திவில்லு, லக்டோ தோட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராம் வெடிபொருட்களும் 100 டெட்டர்நேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.