Header Ads



இலங்கையிலிருந்து ஹஜ் செய்யவிருப்பவர்களே..! உங்களுக்கு SMS வந்ததா...?

அடுத்த வருடம் புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விண்­ணப்­பித்­துள்ள விண்­ணப்­ப­தா­ரி­களில் 3000 பேர் தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு கோரப்­ப­ட­வுள்­ளனர்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் விண்­ணப்­ப­தா­ரிகள் விண்­ணப்­பித்த வரிசைக் கிர­மப்­படி 3000 பேருக்கு அவர்­க­ளது கைய­டக்க தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு வெள்ளிக்கிழமை  14 ஆம் திகதி இந்த தக­வலை அனுப்பி வைக்­க­  இருந்தது.

மீள­ளிக்­கப்­ப­டக்­கூ­டிய பதி­வுக்­கட்­ட­ண­மாக 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு அவர்கள் கோரப்­ப­ட­வுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்தார்.

ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக சுமார் 8000 பேர் விண்­ணப்­பித்து காத்­தி­ருப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

இதே­வேளை ஏற்­க­னவே 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­ட­ணத்தைச் செலுத்தி ஹஜ் கட­மையைத் தவ­ற­விட்ட விண்­ணப்­ப­தா­ரிகள் 700 பேர் ஹஜ் கட­மைக்­காக காத்­தி­ருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

அடுத்த வருடம் ஹஜ் கோட்­டாவை இலங்­கைக்கு அதி­க­ரித்து வழங்­கு­மாறு ஏற்­க­னவே சவூதி ஹஜ் அமைச்­சி­டம கோரிக்கை விடுத்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

No comments

Powered by Blogger.