ஐ.தே.க. க்கு ஏன் ஆதரவளிக்கிறோம் - பாராளுமன்றத்தில் விஜிதமுனி அதிரடி உரை
“ அரசுக்கு ஆதரவை வழங்க நாங்கள் முடிவெடுக்க பல காரணங்கள் உள்ளன. அரசியல் நெருக்கடி நாட்டின் எல்லா மக்கள் தரப்பிலும் உணரப்பட்டது.
அந்த நெருக்கடியின் சுமை மக்கள் மீதே சுமத்தப்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - அதன் தொண்டர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
நான் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர். எனது தந்தை மூத்த உறுப்பினர் .
அன்று எங்களுக்கு வழிகாட்ட யாரும் இருக்கவில்லை. ஆனாலும் நாங்கள் போராடி வந்தோம்.
ஆனால் இன்று எங்களுக்கு இந்த நிலையை ஏற்படுத்தியது யார்?
மஹிந்த அவர்களை மதிக்கிறேன் ஆனால் அவருடன் இருப்பவர்கள் காரணமாக நாங்கள் இப்படி ஆகினோம் . நாங்கள் கட்சிக்கு உயிரை கொடுத்தோம் ஆனால் எங்களுக்கு என்ன நடந்தது?
நான் ஜனாதிபதியை மதிக்கிறேன் ஆனால் எங்களை நீங்கள் எங்கே வைத்தீர்கள்?
நாட்டில் அரசியல் ஸ்திர நிலையை ஏற்படுத்தவே நாங்கள் இந்த முடிவெடுத்தோம் . அதனால் தான் இந்த கூட்டணியுடன் இணைந்தோம்!”
என்றார் விஜித் விஜிதமுனி சொய்சா ..
-Sivaraja-
Post a Comment