Header Ads



பெரும்பான்மையான மக்கள் சஜித்தையே, ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கின்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவே இருக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையான மக்கள் சஜித் பிரேமதாஸவையே எதிர்பார்க்கின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியினால், ஜனாதிபதி தேர்தல்களில் பொது வேட்பாளர்களாக சரத் பொன்சேகா மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை நிறுத்திய போது, சஜித் பிரேமதாஸவை நிறுத்தாமைக்கான காரணம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவை நிறுத்தி பெரும்பான்மையான மக்களின் பலத்தை வெல்வதாகவும் ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.