Header Ads



மகிந்தவுக்கு தீர்ப்பை வழங்கிவிட்டு, இன்று ஓய்வு பெறவுள்ள நீதியரசர்

உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, இன்றுடன் (14) ஓய்வுபெறப் போவதாக, உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் 502ஆவது அறையில், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக்க அலுவிஹார மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில், மஹிந்த ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்குக்காக, மேற்படி நீதியரசர்கள் குழாம் வந்து அமர்ந்ததை அடுத்து உரையாற்றத் தொடர்ங்கிய நீதியரசர் புவனெக்க அலுவிஹார, 40 வருடகாலச் சேவையை இன்றுடன் பூர்த்தி செய்யும் நீதியரசர் ஈவா வனசுந்தர, இன்றுடன் ஓய்வுபெறப் போகிறாரென அறிவித்ததோடு, அவருக்கான வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

No comments

Powered by Blogger.