Header Ads



மனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்

பிரதமராகும்படி கருவை கேட்டேன்..

“ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். 

பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம் கேட்டேன். ஆனால் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை. 

கட்சியுடன் பேசிவிட்டு பதில் தருவதாக சொன்னார்கள். ஆனால் இன்னமும் பதில் இல்லை. 

மறுபுறம் நீதிமன்ற வழக்குகள் தொடர்வதால் நாங்கள் எப்படி நடந்துகொள்வது என்று கட்சியுடன் பேசித் தீர்மானிக்க வேண்டும். 

மஹிந்த ராஜபக்ச இன்று -14- காலை என்னை சந்தித்து இந்த நெருக்கடி நிலைமை தொடரவிட்டு என்னை மேலும் சிக்கலுக்குள்ளாக்க விரும்பவில்லையென தெரிவித்து பதவி விலகுவதாக சொன்னார். நாங்கள் வேறல்ல . எதிர்க்கட்சியில் எங்களது கட்சி உட்காரும்..”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரி !

-sivaraja-

1 comment:

  1. சீச்சீ இந்தப் பழம் புளிக்கிறதோ...?

    ReplyDelete

Powered by Blogger.