Header Ads



புதிய பிரதமர் தலைமையில், அமைச்சரவை பதவியேற்கும் - ரணில் பிரதமராகலாம்...!

நாளை (14) வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பையடுத்து புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம் இன்று (13) வழங்கிய நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான தீர்ப்பையடுத்து ஜனாதிபதி மேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.

2 comments:

Powered by Blogger.