Header Ads



பதவியிழந்தார் சம்பந்தன் - தலைவரானார் மஹிந்த - சபாநாயகர் அதிரடி பிரகடனம், ஐ.தே.க. எதிர்ப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை, நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கமைய எதிர்க்கட்சித் தலைவராக  சபாநாயர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பக்கம் அதிக ஆசனத்தை கொண்டுள்ள கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்கியுள்ளதாக, சபாநாயகர்  குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் கூடிய போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரைக் காலம் எதிர்க்கட்சித் தலைவராக கடமையாற்றிவந்த இரா.சம்பந்தன் அப் பதவியை இழந்துள்ளார். இந்நிலையில் ஐக்கிய  தேசிய முன்னணியினர் சபையில் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு கடும் எதிர்ப்பை வெ ளியிட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.