Header Ads



மாவனெல்லை சம்பவம் - தாய்லாந்திலிருந்து ஜனாதிபதி கபீருடன் பேச்சு


கண்டி மாவனெல்லை பகுதியில் புத்த சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால விசாரித்துள்ளார்.

தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி அங்கிருந்து அவசர தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, அமைச்சர் கபீர் ஹசீம் உடன் கலந்துரையாடி உள்ளார்.

மாவனெல்ல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்கமாறு அவர் கோரியுள்ளார்.

பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் பதற்ற நிலைமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.