முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது, உதவி செய்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
கடந்த மார்ச் மாதம் நடந்த கண்டி கலவரத்தின் போது ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த என்டறுதென்ன முஸ்லிம் கிராமம் முழமையாகப் பாதிக்ப்பட்டது. இருப்பினும் அங்கு பல்வேறு வழி முறைகளின் நிலைமையை சுமுகமாக்கி அமைதியை ஏற்படுத்தும் விதத்தில் தமது கடமைக்கு மேலதிகமாக அர்பணிப்புக்களைச் செய்த கிராம அதிகாரி பிரதீப் வல்தெனிய மற்றும் ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் ஜனக ஜயசுந்தர ஆகியோர் என்டருதென்ன அபிவிருத்தி நிதியம் மற்றும் கிராம வாசிகளால் கௌரவிக்கப்பட்டனர். (2.12.2018)
மேற்படி நிதியத்தின் தலைவர் எம்.ஐ.எம். சிப்லியினால் நினைவுச்சின்னம் வழங்கப்படுவதையும் பள்ளி நிர்வாக சபைத்தலைவர் என்.எம். நயீம் உற்பட அதிதிகள் உரையாற்றுவதையும் கலந்து கொண்டோரில் ஒருபகுதியையும் படத்தில் காணலாம்.
Post a Comment