Header Ads



சமூ­கங்கள் உணர்ச்சி வசப்பட்டு, வன்முறைகளில் ஈடுபடக் கூடாது - பொது­ ப­ல­சேனா

கண்டி மற்றும் மாவ­னெல்லை நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டுள்ள பின்­ன­ணியில் அர­சியல் சூழ்ச்சிகள் இருக்­கலாம். அதனால் இச் சம்­ப­வங்கள் குறித்து பொலிஸ் புல­னாய்வுப் பிரிவு விரி­வான விசா­ர­ணை­களை நடத்தி சூத்­தி­ர­தா­ரி­களைக் கண்­ட­றிய வேண்டும் என பொது­ப­ல­சேனா அமைப்பின் தேசிய அமைப்­பாளர் விதா­ரன் ­தெ­னிய நந்­த­ தேரர் தெரி­வித்தார். கண்டி மற்றும் மாவ­னெல்­லையை அண்­மித்த பகு­தி­களில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் நான்கு முஸ்லிம் இளை­ஞர்கள் பொலி­ஸாரால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இச் சம்­ப­வங்கள் தொடர்பில் விரி­வான விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும். மீண்டும் நாட்டில் சிங்­கள –முஸ்லிம் இனக்­க­ல­வ­ரங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­ட­மிட்ட செய­லா­கவும் இருக்­கலாம். அதனால் இதன் பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் இனங்­கா­ணப்­பட்டு அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும்.

ஆட்­சி­யா­ளர்­களும் பாது­காப்புப் பிரி­வி­னரும் நாட்டின் சட்­டத்­தி­னையும் ஒழுங்­கையும் உறு­திப்­ப­டுத்த வேண்டும். இவ்­வா­றான மதங்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும்.சமூ­கங்கள் உணர்ச்சி வசப்பட்டு வன்முறைகளில் ஈடுபடக் கூடாது. மதத்தலைவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களைச் சரியான பாதையில் வழி நடத்த வேண்டும் என்றார்.
-Vidivelli

2 comments:

  1. Be appreciative and accept reality. When commenting, be responsible and think that you are putting your comment as a Muslim and on behalf of Muslims. When you say something, not all but most generalize that Muslims have the same view, as yours.

    ReplyDelete

Powered by Blogger.