Header Ads



இனியொரு போதும் ஐ.தே.க.டன் இணைந்து செயற்பட மாட்டோம் -

இனியொரு போதும் ஐக்கிய தேசிய கட்சியியுடன் இணைந்து செயற்பட மாட்டோம்.  அதிகாரம் கையிலிருந்தால் மாத்திரமின்றி அதிகாரம் இல்லாத போதும் சுதந்திர கட்சி உறுப்பினர்களால் செயற்பட முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

இன்று செவ்வாய்கிழமை பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் ஊடகவியளாலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 

கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? 

பதில் : இரண்டு வருடங்கள் ஒப்பந்தம் கைசாத்திட்டு அதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியுடன் தேசிய அரசாங்கமாக செயற்பட்டோம்;. அத்தோடு ஒப்பந்தம் இன்றி மேலும் ஒரு வருடம் ஆட்சியினை முன்னெடுத்தோம். எனினும் மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அந்த விடயத்தில் உறுதியாகவுள்ளது. இனியொரு போதும் ஐக்கிய தேசிய கட்சியியுடன் இணைந்து செயற்பட மாட்டோம். எனவே தான் எதிர்கட்சியாக செயற்பட தீர்மானித்தோம். 

No comments

Powered by Blogger.