Header Ads



புத்தர் சிலை சேதம், இனமுறுகல் ஏற்பட்டு பாரிய அழிவுகளை கொண்டுவரலாம்

புத்தர் சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவுமாறு  புதுகல ஜனவங்க தேரோ ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவனல்லையை அண்டிய பகுதிகளில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஒருவரை பொதுமக்கள் பொலிஸில் பிடித்து ஒப்படைத்துள்ள நிலையில் புதுகல ஜனவங்க தேரோ ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது போன்ற சம்பவங்களில் ஒருவரோ அல்லது சிலரோ தொடர்புபட்டிருந்தாலும் கூட இதனால் சமூகங்களுக்கு இடையே இனமுறுகல்கள் ஏற்பட்டு பாரிய அழிவுகளை கொண்டுவரலாம் என்பதால் இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்டம் மற்றும் நீதித்துறை ஊடாக உச்சகட்ட தண்டனையை வழங்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.