Header Ads



அழகான பெண்களையும், பாடசாலை மாணவிகளையும் இரகசியமாக படம்பிடித்த பஸ் நடத்துனர் கைது

இறுதி படிக்கு கீழே இறங்கிச் சென்று, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற மேற்படி சம்பவங்களில் போது, தங்கல்லை பிரதேசத்தைச் சேர்ந்த பஸ் நடத்துனர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீண்ட நாள்களாக இச் சம்பவம் இடம்பெற்று வருகின்றது என்பதுடன், எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் பதிவுச்செய்யப்படும் வீடியோக்கள்  யாவும், வெளிநாட்டவர்களுக்கு விற்பனைச் செய்யப்படுவதாகவும், ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில், மேலும் தெரியவருவதாவது,

தனியார் பஸ்களில் பயணிக்கும் மிகவும் அழகான பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள், அந்த பஸ்ஸிலிருந்து இறங்கும் போது, ஓடோடிச்சென்று, முந்திக்கொண்டு இறங்கும் நடத்துனர் ஒருவர், தன்னுடைய அலைபேசியின் ஊடாக, புகைப்படங்களை மிகவும் சூட்சுமமான முறையில் பிடித்துகொண்டிருந்துள்ளார்.

அத்துடன், கீழ் படியிலிருந்து வீடியோக்களையும் மிகவும் சூட்சுமமான முறையில் பதிவுச்செய்துகொண்டும் உள்ளார். புகைப்படங்களை பிடிப்பதற்கும், வீ​டியோக்களை பதிவுச் செய்வதற்கும் அவர், மூன்று அலைபேசிகளை பயன்படுத்தியுள்ளாரென, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அலைபேசிகளில், பெண்களின் உள்ளாடைகள் தெரியுமளவுக்கு, புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் இருந்தன என, பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பஸ்களில் பயணிக்கும் போதுமட்டுமற்றி, ஏறும்போதும், பஸ்ஸிலிருந்து இறங்கும்போதும், மிகவும் அவதானமாக இருக்குமாறு, மீட்டியாக்கொடையைச் சேர்ந்த பெண்கள் சிலர், ​ஏனைய பெண்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.