Header Ads



இலஞ்சம், ஊழல்வாதிகளையே மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கின்றனர்

இந்த நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாத இலஞ்சம், ஊழல்வாதிகளையே மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கின்றனர். எதிர்வரும் காலத்தில் அவ்வாறு நடக்கக்கூடாது என நான் பிரார்த்திக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

மன்னாரில் இன்று (16) இடம் பெற்ற தேசிய நத்தார் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமது நாட்டிலே சமாதானம், நல்லிணக்கத்திற்கு இந்த கிறிஸ்தவ கத்தோலிக்க போதனை மிக மிக முக்கியமானது. எனவே தேச ஒற்றுமைக்கு மாத்திரம் அல்ல பல்வேறு துறைகளுக்கும் முக்கிய அங்கம் வகிக்கின்றது. எனவே தாய், தந்தை, பிள்ளை மாத்திரம் அல்ல சமூகத்திலே எல்லாத் துறைகளுக்கும் இந்த சமாதானம் மிக மிக அவசியம். 

சமாதானத்திற்காக எங்களை நாங்கள் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். எல்லோர் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சமாதானம் நல்லிணக்கம் முக்கியமாகின்ற பல விடயங்கள் இருக்கின்றது. 

அதனை வெறுமனே உரைகளின் ஊடாக மாத்திரம் திருப்தியடைய முடியாது. எனவே வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய அபிவிருத்தி ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். 

No comments

Powered by Blogger.