Header Ads



பல்டி அடித்த, சிலரின் பரிதாபம்

ஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி மகிந்த தரப்பில் இணைந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ளதாக வார இறுதி செய்தித்தாள்களில் செய்தி வௌியாகியிருந்தன.

இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்னவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் அதனை நிராகரித்தார்.

கடந்த 26ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளித்தனர்.

ஆனந்த அலுத்கமகே மற்றும் அசோக பிரியந்த அந்த தரப்பில அடங்குகின்ற நிலையில் , அவர்கள் பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதேபோல் , விஜேதாச ராஜபக்ஸ , எஸ்.பீ.நாவின்ன , துனேஸ் கன்கந்த ஆகியோரும் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.