Header Ads



"ஜனாதிபதி அரசியலமைப்பை மீறினாலும், பிரதமர் அவ்வாறு செய்யமாட்டார்"

ஜனாதிபதி அரசமைப்பை மீறினாலும் பிரதமர் அவ்வாறு செய்யமாட்டாரெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  நன்றாக கல்வி கற்றவர் என்பதால் அவர் அரசமைப்பை மீறிச் செயற்படமாட்டாரென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது உறுப்பினர்கள் 7 பேர் சுயாதீனமாகச் செயற்படுவதாக அறிவித்துள்ள நிலையில், அரசமைப்பின் 30 பேருக்கே அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பை மீறிச் செயற்பட மாட்டர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.