Header Ads



ஜனாதிபதியை கொலைசெய்ய, சதித் திட்டம் தீட்டப்படவில்லை - ரஞ்சித் மத்தும பண்டார

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்படவில்லை என அரச நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரி மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் தொடர்பில் இதுவரையில் செய்யப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவ்வாறான கொலைச் சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த கொலைச் சதித் திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்ட நாமல் குமார தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.