Header Ads



மோட்டார் சைக்கிள் சில்லில் சேலை, தலைப்பு சிக்கி பெண் மரணம்

களுபோவிடியன நாகரப் பகுதியில் மொரவக - நெலுவ வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.

குறித்த பெண் அணிந்திருந்த சேலை தலைப்பு மோட்டார் சைக்கிளின் பின் பக்க சில்லில் சிக்கியதே விபத்துக்குக் காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  களுபோவிடியன பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.