ரஷ்யாவின் 3 போர்க் கப்பல்கள், நாளை கொழும்பு வருகின்றன
ரஷ்யாவின் மூன்று போர்க் கப்பல்கள் நாளை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாக, கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் பசுபிக் கப்பல்படையைச் சேர்ந்த ஸ்லாவா வகை ஏவுகணைப் போர்க்கப்பலான வர்யாக், பாரிய நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலான அட்மிரல் பன்டலேயேவ், துணைக் கப்பலான பொறிஸ் புரோமா ஆகியனவே கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வரவுள்ளன.
Post a Comment