Header Ads



தமிழர்கள் 3 பிள்ளை பெற்றால் 5000 ரூபாய் கொடுப்பனவு - மட்டக்களப்பில இனவாதம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் யோசனை மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனால் நேற்று கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணை உறுப்பினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழர்களின் தொகையில் காணப்படும் வீழ்ச்சியை கருத்தில்கொண்டும், எதிர்காலத்தில் தமிழர்களின் செறிவினை அதிகரிக்கவேண்டும் என்ற அடிப்படையில் குறித்த பிரேரணையினை தான் கொண்டுவந்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் கூறியுள்ளார்.

இதற்கு தேவையான நிதியினை மாநகரசபை ஒதுக்கீடுசெய்வதுடன், புலம்பெயர் உறவுகளிடம் இருந்துபெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் இதற்கான நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கும் சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

10 comments:

  1. இதை ஏன் இனவாதமாக பார்க்கிறீர்கள்? நல்ல விடயம்தானே. மட்டக்களப்பின் அயல் முஸ்லிம் ஊரிலிருந்து உங்களுக்கு வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் 2 பிள்ளைகளுடன் கட்டுப்படுத்தினால் 10 ஆயிரம் கொடுத்து உங்கள் இலட்சியத்தை அடையலாம்...

    ReplyDelete
  3. prerania kondu vanthavarukku eththanai pillayam?

    ReplyDelete
  4. இதில் என்ன இனவாதம் இருக்கிறது? அதிகமாக பிள்ளைகளை பெற்றுக்கொள்ள சொல்வது எப்படி இனவாதம் ஆகும்?
    இந்த பதிவின் தலைப்பு மாற்றப்பட வேண்டும்

    ReplyDelete
  5. ஒரு தமிழ் பிள்ளையின் விலை வெறும் 5000/= தானா? ;)

    ReplyDelete
  6. அட கர்மாந்திரம் புடிச்சவனுகளா, புள்ள பெத்துக்க காசா? முடியலன்னா பக்கத்தில இருக்குற முஸ்லிம் சகோதரர்களிடம் உதவி கேட்கலாமே? அந்த 5000/- கொடுத்து உதவுறத சொன்னேன்....

    ReplyDelete
  7. Nothing wrong.. good intention, but the problelm is when its the money of Municipal then it should be given to all ppl, not to limited to any community..

    ReplyDelete

Powered by Blogger.