Header Ads



நாடு திரும்பியவுடன், ஜனாதிபதி செய்த 2 நியமனங்கள்

முழுமையாக தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு தாய்லாந்துக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  நாடுதிரும்பினார்.

தன்னுடைய குடும்பத்தாருடன் விடுமுறையை கழிப்பதற்காக, அவர், ஏழுநாள்கள் விஜயத்தை மேற்கொண்டு தாய்லாந்துக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல், கே.கே.டி.பியால் டீ. சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

2
நிதி மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக ஆர்.எச்.எஸ். சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஆர்.எச்.எஸ். சமரதுங்க  நிதி மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டாரென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.