Header Ads



2 பொலிஸார் கொலை - கிளிநொச்சியில் புலி உறுப்பினர் சரணடைவு

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் சற்றுமுன் கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குறித்த நபர் கிளிநொச்சி - வட்டக்கச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் இவர் முன்னாள் புலி ஆவார்.

மட்டக்களப்பு - வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிறப்பு குற்றப்புலனாய்வுக் குழு விசாரணைகளை மேற்கொண்டு இருந்தது.

இவர்கள் முன்னெடுத்த விசாரணைகளில் தெரிவந்ததாவது,

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினம் என்பவற்றை முன்னெடுப்பதற்கு மட்டக்களப்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு முன்னாள் போராளிகள் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்த பணிக்குழுவின் தலைவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இதில் குறித்த பணிக்குழுவில் பணியாற்றிய உறுப்பினர்களையும் பொலிஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையிலேயே வட்டக்கச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளியான இராசநாயகம் சர்வானந்தனை பொலிஸார் தேடியுள்ளனர்.

இதன்போது குறித்த நபர் இன்று -01- காலை கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளார்.

6 comments:

  1. அப்போ புலி பயந்தான் கொல்லிகள் இன்னும் இருக்குது. கொள்கை இல்லாமல் எது செய்தலும் இப்படி தான் நடக்கும்.

    ReplyDelete
  2. Anjan போன்ற தீவிரவாதிகளையும் கைது செய்ய வேண்டும் .

    ReplyDelete
  3. ஏண்டாப்பா எடிட்டர். ஏன் பயந்து சாகுறீர்..??. முன்பும் பல தடவை எழுதி உள்ளேன். பயங்கரவாதிகளை சரியாக குறிப்பிடும் . தலைப்பை இப்படி போடும்.......
    ' கிளிநொச்சியில் தமிழ் பயங்கரவாதி சரண் அடைந்தான் '' . அல்லது '' தமிழ் புலி பயங்கரவாதிகளின் எச்சம் சரணடைந்தான் '' இப்படி ஏதாவது போடும்..

    ReplyDelete
  4. உது புலி இல்லை..உவங்கள் சும்மா. மகிந்த மாம நாட்டில் ஒரு குழப்ப நிலை உருவாக்கி, திசை திருப்பும் ஓர் நடவடிக்கையை உருவாக்கி உள்ளார். எதையும் பதவிக்காக அவர் செய்வார். சும்மா விட்டுட்ட அவர் வெளியேறுவார், அது எல்லாம் பகல் கனவே.

    ReplyDelete
  5. இது தவறான செய்தியாகவும் இருக்கலாம்.
    ஏனெனில், இப்படியான வேலைகள் உலகம் எங்கும் Isis போன்ற முஸ்லிம் குழுக்கள் மட்டும் தான் தற்போது செய்து வருகிறார்கள்

    ReplyDelete
  6. அடேய் ajan கிழக்கில் தமிழ் பயங்கரவாதிகளின் ஆட்டத்தை இனி அரசாங்கம் அடக்கும். உலகிலேயே மிகப்பெரிய முட்டாள்கள் இந்த இலங்கை தமிழ் பயங்கரவாதிகள்தான். பிரபாகரனும் தன்னுடைய முட்டாள்தனத்தால் தான் அழிந்தான்

    ReplyDelete

Powered by Blogger.