அடம்பிடிக்கும் ரவியினால், யானைக்குள் குழப்பம் - 15 பேர் ரணிலிடம் வக்காலத்து வாங்கினர்
ரவி கருணாநாயக்கவுக்கு நிதி அமைச்சை கொடுப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஒரு பெரும் நெருக்கடி நிலையொன்றை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்நோக்கியுள்ளது...
சுமார் 15 எம் பிக்கள் ரவிக்கான தமது ஆதரவை ஐ தே க தலைமையிடம் தெரிவித்துள்ளனர்.
நிதி அமைச்சு கிடைக்காத பட்சத்தில் அரசியல் ரீதியில் சர்ச்சைக்குரிய தீர்மானம் ஒன்றை தனது சார்பு எம் பிக்களுடன் ரவி எடுக்கக் கூடுமென உள்ளக தகவல்கள் சொல்கின்றன..
இதேவேளை இன்று காலை நடந்த ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில், சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வரலாம் என்பதால் சிலருக்கு இரண்டாம் சுற்றில் பதவிகள் வழங்கப்படுமென்றும் அதனால் முதல்சுற்றில் சில விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டுமென கேட்டுள்ளார்...
இதன்படி மலிக் சமரவிக்ரம , மனோ கணேசன் , றிசார்த் பதியுதீன் உட்பட்ட சிலர் பிரதமரின் அந்த கோரிக்கையைஏற்று அதன்படி விட்டுக்கொடுக்க தயாரென தெரிவித்துள்ளனர் .
-Sivarajah-
-Sivarajah-
Why Ravi is adamant in getting this ministry ?
ReplyDelete