மாவனெல்லையில் ஜனவரி 11 வரை தடை ஆர்ப்பாட்டத்திற்கு தடை - நீதிபதி வழங்கிய உத்தரவு இதோ
மாவனெல்ல பகுதிகளில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினரால் கடந்த 29ஆம் திகதி நடாத்தவிருந்த ஊர்வலத்திற்கு மாவனெல்லை மஜிஸ்திரேட் நீதி மன்றத்தால் தடையுத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் வழக்கு அமுலாக்கல் சட்டத்தின் 106 (1) உறுப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்ட மேற்படி நீதிமன்ற பணிப்புரை வருமாறு: 2018.12. 28 ஆம் திகதி மாவனெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.டீ.டீ. நிலங்க மூலம் மாவனெல்ல ம/உ வழக்கு இலக்கம் பீ.11333/2018 இன் கீழ் அறிக்கையிடப்பட்ட காரணிகளுக்கமைய, மெதிரிகிரியே புஞ்ஞசார தேரரின் தலைமையில் 2018.12.29 ஆம் திகதி மாவனெல்ல நகரத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியால் முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே குழப்பங்கள் விளையக்கூடிய சாத்தியங்கள் உருவாகலாம் என்று நீதிமன்றம் கருதுகிறது.
அதனால் மேலே குறிப்பிடப்பட்ட ஆர்ப்பாட்ட நிகழ்வை நிறுத்துமாறு 1979 / 15ஆம் இலக்க குற்றவியல் வழக்கு அமுலாக்கல் சட்டத்தின் 106(1) உறுப்புரைக்கமைய மெதிரிகிரியே புஞ்ஞசார தேரர் ஆகிய உங்களுக்கும் உங்களைப் பின் தொடர்வோருக்கும் 2018-.12-.29 ஆம் திகதி முதல் 2019.-01-.11 ஆம் திகதிவரை ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல், ஏற்பாடு செய்தல், ஒன்று கூடுதல், ஆர்ப்பாட்டக் கூட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது போன்றவற்றில் ஈடுபடாதிருக்கவும் புஞ்ஞசார தேரர் ஆகிய உங்களுக்கும் உங்களைப் பின் தொடர்வோருக்கும் இத்தால் பணிப்புரை விடுக்கின்றேன் என்று மாவனெல்ல மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதியின் பணிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli
மனிதர்கள் எல்லோரும் மிகவும் நல்லவரகள்தான். ஆயினும் தன்னுடைய சோம்பேறி வாழ்க்கைக்கு மேலும் மேலும் உயிர் கொடுக்க கொடுக்க வேண்டுமன்பதற்காக தன் மக்களையே பகடையாகப் பாவிக்கும் சொற்ப மனித விலங்குகளுக்கு மத்தியில் நாங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படியான வன்முறைகளால் எந்தப் பொதுமகன் தன் வாழ்க்கையை சீரமைத்துக்கொண்டான். தமது வாழ்க்கையின் மேம்பாட்டிற்காக அரசியலாலர்களும், பிற்போக்குச் சக்திகளும் மக்களைப் பயன்படுத்துகினறனர். இவரகளுல் நாட்டின் பிரதம அமைச்சர்களாகவும், அமைச்சரகளாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் பதவி வகித்த வகிககின்ற பதவி வகிக்கின்றவரகளும் அவரகளது அடிவருடிகளும்தான் காரணமாக இருக்கின்றார்கள் என்பது வரலாற்று உண்மை.. இந்த அதி முட்டாள்த்தனமான செயற்பாடுகளால் நாடோ, ஏற்பாட்டாளர்களோ அன்றேல் பாதிக்கபபட்டவரகளோ எவ்வித நன்மையினையும் அடையவில்லை. மாறாக ஒவவொரு குழப்பகரமான சந்தர்ப்பத்திலும் முழு நாடும் 15 வருட முன்னேற்றத்தை இழந்து செல்கின்றன.
ReplyDelete