Header Ads



PM களை விலைக்கு வாங்கும், தொகை இரட்டிப்பாகியது - நேற்றிரவிலிருந்து பேரப்பேச்சு தீவிரம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்ச தரப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் மீண்டும் இறங்கியுள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசும் நடவடிக்கைகள் நேற்றிரவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விலைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி மாற வழங்கப்படும் தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


1 comment:

  1. இந்த கட்டாக்காலி நாய்கள் எந்தப் பெறுமதியற்றவை.

    ReplyDelete

Powered by Blogger.