Header Ads



வட்டமடிக்கும் பசில், அடைகாக்கும் கோழிகளின் நிலையில் றிஷாத் ஹக்கீம், MP க்கள் தப்பிப்பார்களா..?

உருவாகியுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இரு பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் தனது பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றாக வைப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

தமது உறுப்பினர்களைப் பிரித்தெடுப்பதனைத் தவிர்ப்பதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் கடந்த சில தினங்களாக தமது உறுப்பினர்களை தம் வீடுகளிலே தங்க வைத்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த சனியன்று தம் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் குடும்ப திருமணத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக ஹெலிகொப்டர் மூலம் பயணித்துள்ளனர்.

தாய்க் கோழி அடை காப்பது போன்று, தம் உறுப்பினர்களை இரு கட்சித் தலைவர்களும் ஒன்றாகவே வைத்துள்ளனர் என அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை மகிந்தவின் இளைய சகோதரரான பசில், தம்முடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக குறித்த கட்சியின் எம்.பி. ஒருவர் jaffna muslim  இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

2 comments:

  1. அவ்வளவு நம்பிக்கை, ஷப்பா...... கண்ணக் கட்டுதே பாசம்....

    ReplyDelete
  2. மார்க்க விழுமியங்கள் இல்லாத அரசியல் இப்படித்தான் இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.